sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கோவில் வீதியில் வழிந்தோடும் கழிவுநீர்

/

கோவில் வீதியில் வழிந்தோடும் கழிவுநீர்

கோவில் வீதியில் வழிந்தோடும் கழிவுநீர்

கோவில் வீதியில் வழிந்தோடும் கழிவுநீர்


ADDED : ஜூலை 19, 2024 01:21 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 01:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வடக்கு மாட வீதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் அப்பளம் தயாரிக்கும் குடிசை தொழில் செய்வோரும் உள்ளனர்.

ஏகாம்பரநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மட்டுமின்றி புதிய ரயில் நிலையம், மீன் சந்தை, ஒலிமுஹமதுபேட்டை, பஞ்சுபேட்டை, அரக்கோணம் ரோடு, கருப்படிதட்டடை உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.

இத்தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, மூன்று மாதங்களுக்கு மேலாக 'மேன்ஹோல்' வழியாக வெளியேறும் கழிவுநீர், சாலையில் வழிந்தோடி வருகிறது.

இதனால், நடைபாதை ஒட்டியுள்ள பகுதியில், பாசி படர்ந்துள்ளது. தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. ஏகாம்பரநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் முகம்சுளித்தபடியே செல்கின்றனர்.

எனவே,காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வடக்கு மாட வீதியில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us