sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் இணைப்பு

/

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் இணைப்பு

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் இணைப்பு

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் இணைப்பு


ADDED : ஜூலை 07, 2024 12:19 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே உள்ள காமராஜர் சாலையில், ஏற்கனவே இருந்த பயணியர் நிழற்குடை போதிய வசதிகள் இல்லாத நிலை இருந்தது.

காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 18 லட்சம் ரூபாய் மதிப்பில், 'ஏ.டி.எம்., கழிப்பறை வசதியுடன் புதிதாக பயணியர் நிழற்குடை கட்டடம் கட்டப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம், எம்.எல்.ஏ., எழிலரசன் திறந்து வைத்தார்.

அதன்பின், இந்த நிழற்குடையில், இரவில் மின் விளக்கு எரியாமலும், 'ஏசி' இயங்காமலும் இருந்ததால், இரவில் பயணியர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

குறிப்பாக, நிழற்குடையுடன் கட்டப்பட்ட கழிப்பறைக்கு, கழிவுநீர் இணைப்பு கொடுக்காமலேயே, எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.

கழிவுநீர் இணைப்பு கொடுக்கவில்லை என்ற விமர்சனம், சில மாதங்களாக இருந்த நிலையில், கழிப்பறைக்கு அருகில் உள்ள மழைநீர் கால்வாயில் திடீரென கழிவுநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள மழைநீர் கால்வாயில், ஏற்கனவே முறைகேடாக வணிகர்கள் பலரும் கழிவுநீர் இணைப்பை கொடுத்துள்ள நிலையில், அதன் வரிசையில், அரசு நிதியில் கட்டப்பட்ட கழிப்பறைக்கான இணைப்பையும் மழைநீர் கால்வாயில் கொடுத்திருப்பதை பார்த்தும் பயணியர் கிண்டல் செய்கின்றனர்.

பயணியர் நிழற்குடைகள் தரமற்று, முறையின்றி காஞ்சிபுரத்தில் கட்டப்படுவது தொடர்கிறது. ஏற்கனவே, எம்.பி., செல் வம் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு, சமீபத்தில் திறக்கப்பட்ட பயணியர் நிழற்குடையின் சிமென்ட் கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது.

இந்நிலையில், எம்.எல்.ஏ., நிதியில் கட்டப்பட்ட கழிப்பறை கழிவுநீர் இணைப்பை, மழைநீர் வடிகாலில் கொடுத்திருப்பது அடுத்த பேசும்பொருளாக மாறியுள்ளது.






      Dinamalar
      Follow us