sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி தொகுதி ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு அலுவலர் பற்றாக்குறை

/

காஞ்சி தொகுதி ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு அலுவலர் பற்றாக்குறை

காஞ்சி தொகுதி ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு அலுவலர் பற்றாக்குறை

காஞ்சி தொகுதி ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு அலுவலர் பற்றாக்குறை


ADDED : ஏப் 02, 2024 02:16 AM

Google News

ADDED : ஏப் 02, 2024 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம், காஞ்சிபுரம் -- தனி லோக்சபா தொகுதியில், தேர்தல் ஊழியர்கள் பற்றாக்குறையால், ஓட்டுச்சாவடிகளில் தலா ஒரு ஊழியர் தவிர்க்கப்பட்டுள்ளார்.

இத்தொகுதியில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் காஞ்சிபுரம், உத்திரமேரூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் -- தனி, செய்யூர் -- தனி ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.

லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, வரும் 19ம் தேதி நடக்கிறது. இதையடுத்து, தேர்தல் ஆணையம், அரசுப் பள்ளிகளில், ஓட்டுச்சாவடிகள் அமைப்பது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் அளிப்பது, மண்டல அலுவலர்கள், ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் பிற ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால், ஓட்டுச்சாவடி ஊழியர்களில், ஒரு ஊழியர் தவிர்க்கப்பட்டுள்ளார்.

ஓட்டுச்சாவடியில், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுப்பதிவு அலுவலர்கள் 1, 2, 3 என, தலா நான்கு பேர் நியமிக்கப்படுவர்.

இத்தேர்தலில், ஓட்டுப்பதிவு மூன்றாம் அலுவலர் தவிர்க்கப்பட்டுள்ளார்.

வாக்காளர் அடையாள ஆவணத்தை சரிபார்த்து, அவரது வாக்காளர் எண், பாகம் எண் உள்ளிட்ட விபரங்களை படிவத்தில் பதிந்து, கைவிரலில் மையிட்டு, ஓட்டளிக்க, 1, 2 அலுவலர்கள் ஏற்பாடு செய்வர். மூன்றாம் அலுவலர், மின்னணு இயந்திரத்தை இயக்கி, ஓட்டளிக்க அனுமதிப்பார்.

இது குறித்து, தேர்தல் ஊழியர்கள் கூறியதாவது:

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லுார் ஆகிய சட்டசபை தொகுதிகள், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் தென்சென்னை லோக்சபா தொகுதிகளில் உள்ளன. ஆனாலும், செங்கல்பட்டு மாவட்டம் என்பதால், அங்கும் மாவட்ட ஊழியர்களே பணிபுரிய வேண்டும்.

எனவே தான், காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், மூன்றாம் அலுவலர் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டே அலுவலர்கள், பணிகளை பகிர்ந்து செய்ய அறிவுறுத்தியுள்ளனர். எனவே, பணி விபரம் நன்கு அறிந்தவர்களை நியமிக்க, அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us