/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மண் அரிப்பால் பள்ளம் செவிலிமேடில் விபத்து அபாயம்
/
மண் அரிப்பால் பள்ளம் செவிலிமேடில் விபத்து அபாயம்
ADDED : பிப் 24, 2025 01:08 AM

செவிலிமேடு:காஞ்சிபுரம், செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தில் இருந்து கீழம்பி செல்லும் புறவழிச்சாலை உள்ளது. உத்திரமேரூர், வந்தவாசி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து வேலுார், பெங்களூரூ, அரக்கோணம், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள், காஞ்சிபுரம் நகருக்குள் செல்லாமல் கீழம்பி புறவழி சாலை வழியாக சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், செவிலிமேடு ஏரிக்கரை ஒட்டியுள்ள பகுதியில், மழை காரணமாக மண்அரிப்பு ஏற்பட்டு சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
புறவழி சாலை என்பதால், வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, நிலைதடுமாறி பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, செவிலிமேடு ஏரிக்கரை சாலையோர பள்ளத்தை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

