/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செல்வமகள் திட்டத்திற்கு சிறப்பு முகாம்
/
செல்வமகள் திட்டத்திற்கு சிறப்பு முகாம்
ADDED : பிப் 22, 2025 09:50 PM
காஞ்சிபுரம்:அஞ்சல் துறையில், பெண் குழந்தைகள் நலனுக்காக, ‛செல்வ மகள்' சேமிப்பு திட்டத்தை, 2015ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ், 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பெற்றோர், பாதுகாவலர்கள் கணக்கு துவக்கலாம்.
இதில், 250 - 1.50 லட்சம் ரூபாய் செலுத்தி கணக்கு துவக்கலாம். இதற்கு, 8.2 சதவீத வட்டி கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் செயல்படும் வைப்பு தொகை, வருமான வரி சட்ட பிரிவு ‛80-சி'யின் கீழ், ஒரு நிதியாண்டிற்கு 1.50 லட்சம் ரூபாய் வரை வரிச்சலுகை வழங்கப்படுகிறது.
கணக்கு துவக்கி 21 ஆண்டுகள் முடிவில் முதிர்ச்சி தொகை கிடைக்கும். அதற்கு முன் உயர் கல்விக்காக, 10ம் வகுப்பு முடித்து அல்லது 18 வயது வயதை கடந்தால், 50 சதவீதம் தொகை எடுத்துக் கொள்ளலாம்.
காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டம், காஞ்சிபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதுார், திருத்தணி உள்ளிட்ட தபால் அலுவலகங்களில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட உள்ளன.
இங்கு, வரும் 28 மற்றும் மார்ச் 10ம் தேதி நடக்கிறது. இதுதவிர, கிளை தபால் அலுவலகங்கள் உட்பட அருகிலுள்ள அனைத்து தபால் நிலையங்களில், செல்வ மகள் சேமிப்பு கணக்கு துவக்கி பயன்பெறலாம் என, காஞ்சிபுரம் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் தெரித்துள்ளார்.