sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காலாவதி மாத்திரை குவியல்; அணுகு சாலையில் ஆபத்து

/

காலாவதி மாத்திரை குவியல்; அணுகு சாலையில் ஆபத்து

காலாவதி மாத்திரை குவியல்; அணுகு சாலையில் ஆபத்து

காலாவதி மாத்திரை குவியல்; அணுகு சாலையில் ஆபத்து

1


ADDED : ஏப் 02, 2024 02:14 AM

Google News

ADDED : ஏப் 02, 2024 02:14 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநீர்மலை,சென்னை புறவழிச் சாலையை ஒட்டியுள்ள மக்களின் வசதிக்காக, அணுகு சாலை போடப்பட்டுள்ளது. இதில், திருநீர்மலை பகுதியில் அணுகு சாலையை ஒட்டி, கட்டட கழிவுகள், ரசாயனம் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டுவது அதிகரித்துள்ளது.

அதேபோல், குப்பை கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல, இவற்றை உண்பதற்காக கால்நடைகளும் அங்கு சுற்றித்திரிகின்றன.

இந்த நிலையில், அப்பகுதியில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளன. காலாவதியான மாத்திரைகளை, முறைப்படி அழிக்க வேண்டும். இதை செய்யாமல், விதிமீறி மருந்து, மாத்திரைகளை மூட்டை மூட்டையாக கட்டி வந்து கொட்டி விட்டு சென்றுள்ளனர்.

இதனால், மக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விதிமீறலில் ஈடுபட்டோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.






      Dinamalar
      Follow us