/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தெரு குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
/
தெரு குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : ஜூலை 31, 2024 02:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை, நத்தப்பேட்டை பகுதியில், சாலையோரத்தில் உள்ள வீடுகள், கடைகளின் கூடுதல் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தெரு குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதில், ஏ.கே.தங்கவேல் நகர், எதிரில் உள்ள ஒரு தெரு குழாய், அடிப்பாகத்தில் உடைந்துள்ளது. உடைந்த குழாயின் அடிப்பகுதியில் குச்சி வைத்து அடைத்துள்ளனர்.
இருப்பினும், குழாயிலிருந்து வெளியேறும் குடிநீர், அப்பகுதியில் ஓடை போல, வீணாக சாலையில் வழிந்தோடுகிறது.
எனவே, நத்தப்பேட்டையில், தெரு குழாய் உடைப்பை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.