sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அரும்புலியூர் - செங்கை தடத்தில் பேருந்து நிறுத்தப்பட்டதால் அவதி

/

அரும்புலியூர் - செங்கை தடத்தில் பேருந்து நிறுத்தப்பட்டதால் அவதி

அரும்புலியூர் - செங்கை தடத்தில் பேருந்து நிறுத்தப்பட்டதால் அவதி

அரும்புலியூர் - செங்கை தடத்தில் பேருந்து நிறுத்தப்பட்டதால் அவதி


ADDED : ஜூன் 28, 2024 01:42 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில், அரும்புலியூர், கரும்பாக்கம் திருவானைக்கோவில், விச்சூர், மிளகர்மேனி உள்ளிட்ட பல கிராமங்கள், ஒன்றியத்தின் கடைக்கோடியில் உள்ளது.

இந்த கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், செங்கல்பட்டு மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர்.

மேலும், இப்பகுதிகளைச் சேர்ந்த பள்ளி கல்லுாரி மாணவ - மாணவியர், செங்கல்பட்டில் உள்ள கல்வி கூடங்களில் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், செங்கல்பட்டில் இருந்து அரும்புலியூர் வரை இயக்கப்பட்ட தடம் எண்: 129ஏ மற்றும் 129பி ஆகிய அரசு பேருந்துகள், கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டு உள்ளன.

இதனால், அரும்புலியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள், மாணவ - மாணவியர் உள்ளிட்ட பல தரப்பினரும் செங்கல்பட்டு சென்று வர போக்குவரத்து வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து விச்சூர் கிராம வாசிகள் கூறியதாவது:

செங்கல்பட்டில் இருந்து மெய்யூர் வழியாக இயங்கி வந்த அரசு பேருந்து, எவ்வித அறிவிப்புமின்றி திடீரென நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், நேரில் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, செங்கல்பட்டில் இருந்து அரும்புலியூருக்கு, தினமும் காலை, மாலை என, இரு வேளையாவது அரசு பேருந்து இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us