
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக ஜெயகுமார் என்பவர் பதவி வகித்தார்.
அவருக்கு, திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக இடமாறுதல் அளிக்கப்பட்டு உள்ளது.
அவருக்கு பதிலாக, வேலுார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக இருந்த ஆர்த்தி என்பவரை ஊரக வளர்ச்சி துறை நியமித்து இருந்தது.
அவர், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்துதெரிவித்தனர்.