நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில், வீடுகள் கட்டுமான உதவி திட்ட அலுவலராக விஷ்ணுபிரியா என்பவர் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
அந்த பணியிடத்திற்கு, வேலுார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த, பானுமதி என்பவரை, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வீடுகள் கட்டுமான பிரிவுக்கு உதவி திட்ட அலுவலராக, அத்துறை நிர்வாகம் நியமித்து உள்ளது.
அவர், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, ஊரக வளர்ச்சி துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.