sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

திருமணமான மறுநாளே புதுமாப்பிள்ளை மரணம்

/

திருமணமான மறுநாளே புதுமாப்பிள்ளை மரணம்

திருமணமான மறுநாளே புதுமாப்பிள்ளை மரணம்

திருமணமான மறுநாளே புதுமாப்பிள்ளை மரணம்


ADDED : ஜூன் 11, 2024 03:01 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : பெரவள்ளூரை சேர்ந்தவர் லோகேஷ், 40. இவர் சோழிங்கநல்லுாரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் திருச்சியை சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண்ணுக்கும், திருப்போரூரில் உள்ள முருகன் கோவிலில் நேற்று முன்தினம் காலை திருமணம் நடந்தது.

நேற்று மதியம் மாப்பிள்ளை வீட்டுக்கு மணமக்கள் வந்துள்ளனர். இருவரும் அறையில் இருந்த போது, லோகேஷுக்கு திடீரென வாய் மற்றும் மூக்கில் நுரை தள்ளி, மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக லோகேஷை மாதவரம் அருகே ரெட்டேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் லோகேஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

திரு.வி.க.நகர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராஜலட்சுமிக்கு இது இரண்டாவது திருமணம்; முதல் கணவர் கடந்த கொரோனா காலத்தில் இறந்துள்ளார் என்பது தெரியவந்தது.

லோகேஷ் இறப்பு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்






      Dinamalar
      Follow us