/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கடை முன் நிறுத்திய ஊழியர் 'பைக்' ஆட்டை
/
கடை முன் நிறுத்திய ஊழியர் 'பைக்' ஆட்டை
ADDED : ஆக 05, 2024 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:திருவள்ளூர், சரஸ்வதி நந்தவனம் மேட்டூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், 28. ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள எஸ்.எஸ். ஹார்டுவேர் கடையில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன், தன் ‛சுசூகி' பைக்கை, ஹார்டுவேர் கடையின் வெளியில் நிறுத்திவிட்டு, உள்ளே வேலைக்கு சென்றார். வேலை முடிந்து வெளியில் வந்து பார்த்த போது, பைக் காணாமல் போனதை கண்டார்.
இது குறித்து, பிரவீன்குமார் அளித்த புகாரின்படி, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் வழக்கு பதிந்து, 'சிசிடிவி', காட்சிகளை ஆராய்ந்து விசாரித்து வருகின்றனர்.