/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெயிலால் சுருண்டு விழுந்த பெண் பலி
/
வெயிலால் சுருண்டு விழுந்த பெண் பலி
ADDED : மே 04, 2024 09:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி, பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மனைவி ரமாபிரபா, 54.
இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து பிற்பகல் பஜாருக்கு பொருட்கள் வாங்க நடந்து சென்றார்.
அரக்கோணம் சாலையோரமாக நடந்து சென்ற அவர், கடும் வெயிலில் திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.