/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்போற்சவம் நிறைவு
/
வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்போற்சவம் நிறைவு
ADDED : பிப் 14, 2025 07:09 PM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் தெப்ப குளத்தில் ஆண்டு தோறும், தை பவுர்ணமியன்று தெப்போற்சவம் துவங்கி, தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும்.
அதன்படி நடப்பு ஆண்டுக்கான முதல் நாள் தெப்போற்சவம் கடந்த 12ம் தேதி துவங்கியது. இதில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார் மற்றும் பெருந்தேவி தாயாருடன், வரதராஜ பெருமாள், இரவு 7:00 மணிக்கு ‛அனந்தசரஸ்' என அழைக்கப்படும் தெப்ப குளத்தில் எழுந்தருளி, மூன்று முறை வலம் வந்தார்.
இரண்டாம் நாள் தெப்போற்சவமான நேற்று முன்தினம் ஐந்து முறையும், நிறைவு நாளான நேற்று ஏழு முறையும் வரதராஜ பெருமாள் தெப்பத்தில் வலம் வந்தார். ஏற்பாட்டை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.