/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முருகப்பெருமான் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்
/
முருகப்பெருமான் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்
முருகப்பெருமான் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்
முருகப்பெருமான் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்
ADDED : நவ 07, 2024 12:43 AM

காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம், நெமந்தகார தெரு, பழநி ஆண்டவர் முருகப்பெருமான் கோவிலிலில் 15ம் ஆண்டு கந்தசஷ்டி சூரசம்ஹார பெருவிழா கடந்த 1ம் தேதி விநாயகர் வீதியுலாவுடன் துவங்கியது.
இரண்டாள் நாளான நவ., 2ம் தேதி, காலை 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், வீரவாகு காப்பு கட்டும் நிகழ்வும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு முருகப்பெருமான் வீதியுலாவும், தொடர்ந்து சூரன் வதம் செய்யும் நிகழ்வு நடந்தது.
நவ., 3ம் தேதி, காலை, மூலவர் பழநி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், காலை 9:00 மணிக்கு அமரேஸ்வரர் கோவிலில் இருந்து, பம்பை, தவில், நாதஸ்வரம் வாத்தியங்கள் இசைக்க, முருக பக்தர் சுரேஷ், தனது உடலில், 108 வேல் தரித்து முன்னே செல்ல, 108 பெண்கள் பால்குடம் ஏந்தியபடி, முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக பழநி ஆண்டவர் கோவில் சென்றனர்.
தொடர்ந்து மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலை முருகப்பெருமான் வீதியுலாவும், சிங்கமுகா சூரன் வதம் செய்யும் நிகழ்வும் நடந்தது.
ஆறாம் நாள் உற்சவமான நேற்று, காலை 9:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேக ஆராதனையும் தொடர்ந்து வீதியுலாவும், சூரன் தன் பூத சேனைகளுடன் திக்விஜயம் செய்யும் நிகழ்வும் நடந்தது. மாலை பானுகோபன் வதம் செய்யும் நிகழ்வும் நடந்தது.
இன்று, காலை 8:00 மணிக்கு அரசு காத்த அம்மன் கோவிலில் இருந்து சக்திவேல் பெறும் நிகழ்வும், இரவு 9:00 மணிக்கு வீரவாகு துாதும், சூரசம்ஹாரம் நடைபெறும்.
நாளை மாலை தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாட்டை நெமந்தகார, ஒற்றைவாடை, கற்பக பிள்ளையர், இரட்டை பிள்ளையார், கனக சுப்பராய தெரு என, ஐந்துதெரு வாசிகள் இளைஞர் அணியினர் செய்து வருகின்றனர்.