/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பொழுதுபோக்கு பூங்கா அமைக்க திருக்காலிமேட்டினர் வலியுறுத்தல்
/
பொழுதுபோக்கு பூங்கா அமைக்க திருக்காலிமேட்டினர் வலியுறுத்தல்
பொழுதுபோக்கு பூங்கா அமைக்க திருக்காலிமேட்டினர் வலியுறுத்தல்
பொழுதுபோக்கு பூங்கா அமைக்க திருக்காலிமேட்டினர் வலியுறுத்தல்
ADDED : மார் 03, 2025 12:20 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி 21 மற்றும் 22வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேட்டில், 10,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் வசிப்போர், காலை, மாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளவும், விடுமுறை நாட்களில் பள்ளி, கல்லுாரி மாணவ -- -மாணவியர் பொழுது போக்கவும், தங்களது விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில், திருக்காலிமேட்டில், விளையாட்டு பூங்கா, உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட வசதி இல்லை.
மேலும், திருக்காலிமேடில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளியில் மாணவ - மாணவியர் விளையாடுவதற்கான விளையாட்டு மைதானம் இல்லாததால், மாணவர்கள் குளக்கரை சாலையில் விளையாட வேண்டிய அவலநிலை உள்ளது.
விடுமுறை நாட்களில், மாணவ- - மாணவியர் விளையாடுவதற்கும், நடைபயிற்சி மேற்கொள்ளவும், 3 கி.மீ., துாரம் சென்று ரயில்வே சாலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு சென்று வர வேண்டியுள்ளது.
இதனால், முதியோர், சிறுவர் - சிறுமியர், இளம்பெண்கள் வாகன போக்குவரத்து நிறைந்த ரயில்வே சாலை வழியாக, மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு சென்று வருவதில் பல்வேறு சிக்கல் உள்ளது.
எனவே, காஞ்சிபுரம் மாநகராட்சி 21, 22வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேட்டில், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுடன் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.