sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வீட்டிற்குள் கழிவுநீர் ‛'ரிட்டர்ன்' திருவள்ளுவர் தெருவினர் தவிப்பு

/

வீட்டிற்குள் கழிவுநீர் ‛'ரிட்டர்ன்' திருவள்ளுவர் தெருவினர் தவிப்பு

வீட்டிற்குள் கழிவுநீர் ‛'ரிட்டர்ன்' திருவள்ளுவர் தெருவினர் தவிப்பு

வீட்டிற்குள் கழிவுநீர் ‛'ரிட்டர்ன்' திருவள்ளுவர் தெருவினர் தவிப்பு


ADDED : செப் 01, 2024 03:49 AM

Google News

ADDED : செப் 01, 2024 03:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வார்டுக்கு உட்பட்ட திருவள்ளுவர் தெரு, வரதராஜபுரம் தெரு, லாலா குட்டை தெருவில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இப்பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், வீடுகளில் உள்ள கழிப்பறை மற்றும் குளியல் அறையை பயன்படுத்த முடியவில்லை. வீட்டு வாசலில் கழிவுநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் தொற்று நோய் பாதிக்கும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து சின்ன காஞ்சிபுரம் திருவள்ளுவர் தெருவினர் கூறியதாவது:

எங்கள் தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கடந்த இரு நாட்களாக வீட்டில் உள்ள கழிப்பறை மற்றும் குளியல் அறையில் உள்ள கழிவு நீர் வெளியேறாமல் தேங்கியுள்ளதால், அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இதனால், இரு நாட்களாக குளிக்காமல் உள்ளோம். இயற்கை உபாதையை கழிக்க, மாநகராட்சி பொது கழிப்பறையை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

மேலும், பாதாள சாக்கடையில் உள்ள கழிவுநீர் வீட்டிற்குள் 'மேன்ஹோல்' வழியாக 'ரிட்டர்ன்' ஆவதால், துர்நாற்றம் வீசுகிறது. வீட்டில் அமர்ந்து சாப்பிட முடியவில்லை.

வீட்டு வாசலில் கழிவுநீர் தேங்குவதால் தெருவிற்கும், வீட்டு வாசலுக்கும் இடையே மரப்பலகை வைத்து அதன் வாயிலாக வீட்டிற்கும், வெளியிலும் சென்று வருகிறோம். கழிவுநீர் தேக்கத்தால் எங்கள் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, திருவள்ளுவர் தெரு மற்றும் சுற்றியுள்ள வரதராஜபுரம் தெரு, லாலா குட்டை தெருவில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இதேநிலை நீடித்தால், மாநகராட்சி அலுவலகத்தில் குடும்பத்துடன், குடிபெயரும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள்கூறினர்.






      Dinamalar
      Follow us