sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கிழிந்து தொங்கும் சாலையோர பேனர்கள்: விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

/

கிழிந்து தொங்கும் சாலையோர பேனர்கள்: விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

கிழிந்து தொங்கும் சாலையோர பேனர்கள்: விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

கிழிந்து தொங்கும் சாலையோர பேனர்கள்: விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்


ADDED : ஜூன் 23, 2024 03:59 PM

Google News

ADDED : ஜூன் 23, 2024 03:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:

சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டும், நெடுஞ்சாலையோர கட்டடங்கள் மீது பேனர்கள் வைப்பது தொடர்கதையாகி வருகிறது.

இதில் சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சாலையோர உயரமான கட்டடங்கள் மீது விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை வழியே தினமும் பேருந்து, வேன், கனரக வாகனம் என 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த விளம்பர பேனர்கள் வாகன ஓட்டிகள் கவனத்தை திசை திருப்பி விபத்தில் சிக்கும் நிலையில் ஏற்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த விளம்பர பேனர்கள் பல இடங்களில் ஆபத்தான நிலையில் கிழிந்து தொங்குகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

குறிப்பாக தண்டலம், நசரத்பேட்டை, பூந்தமல்லி, சென்னீர்குப்பம் உட்பட பல பகுதிகளில் நெடுஞ்சாலையோரம் விளம்பர பேனர்கள் கிழிந்து தொங்குகின்றன.

எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி விளம்பர பேனர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us