sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஜி.எஸ்.டி., பில் கொடுப்பதை தவிர்த்து வரி ஏய்ப்பில் வியாபாரிகள்

/

ஜி.எஸ்.டி., பில் கொடுப்பதை தவிர்த்து வரி ஏய்ப்பில் வியாபாரிகள்

ஜி.எஸ்.டி., பில் கொடுப்பதை தவிர்த்து வரி ஏய்ப்பில் வியாபாரிகள்

ஜி.எஸ்.டி., பில் கொடுப்பதை தவிர்த்து வரி ஏய்ப்பில் வியாபாரிகள்


ADDED : ஏப் 25, 2024 10:01 PM

Google News

ADDED : ஏப் 25, 2024 10:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், கட்டுமான பொருட்கள், வாகனங்கள் என அனைத்து வகையான பொருட்களுக்கும், சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி.,வரி, பொருட்களுக்கு ஏற்ற விகிதத்தில் விதிக்கப்படுகிறது. அவ்வாறு, விதிக்கப்படும் வரிகள், மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்ற வகையில் பிரித்து, வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது.

வணிகர்கள் கட்டாயமாக ஜி.எஸ்.டி., வரி விதிக்க வேண்டும் எனவும், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரசீதில், கடையின் ஜி.எஸ்.டி.,எண் குறிப்பிட வேண்டும். ஆனால், காஞ்சிபுரத்தில் உள்ள சில கடைகளில், ஜி.எஸ்.டி.,வரி விதிக்காமலும், ஜி.எஸ்.டி., எண் குறிப்பிடாமலும், வாடிக்கையாளர்களுக்கு ரசீது வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, கட்டுமான பொருட்களில் ஒன்றான 'டைல்ஸ்' விற்பனை செய்யும் கடைகளில், ஜி.எஸ்.டி.,பில் வழங்காமல், கைகளால் எழுதப்பட்ட, 'கொட்டேஷன்' பில்களையே, 'கேஷ் பில்களாக' வழங்குகின்றனர். அதில், ஜி.எஸ்.டி.,எண்ணும் குறிப்பிடாமல், வரி ஏய்ப்பு செய்வதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, வணிக வரித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது:

'ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க, இணை கமிஷனர் தலைமையில், வணிக வரித்துறை அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவே உள்ளது. இவர்களை, புலனாய்வு பிரிவு என்பர்.

ஜி.எஸ்.டி., எண் குறிப்பிடாமலும், வரி வசூலிக்காமலும் ஏய்ப்பு செய்வோர் மீது தகவல் தெரிவித்தாலே, கடையில் நேரடியாக ஆய்வு செய்து, உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்பர். வாடிக்கையாளர் தரப்பிலிருந்து, புகார் அல்லது தகவல் தெரிவித்தாலே நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us