sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

விபத்தில் சிக்கிய வாகனத்தால் ஸ்ரீபெரும்புதுாரில் போக்குவரத்து பாதிப்பு

/

விபத்தில் சிக்கிய வாகனத்தால் ஸ்ரீபெரும்புதுாரில் போக்குவரத்து பாதிப்பு

விபத்தில் சிக்கிய வாகனத்தால் ஸ்ரீபெரும்புதுாரில் போக்குவரத்து பாதிப்பு

விபத்தில் சிக்கிய வாகனத்தால் ஸ்ரீபெரும்புதுாரில் போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஜூலை 08, 2024 05:22 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்: திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட தொடுகாடு ஊராட்சி.

ஸ்ரீபெரும்புதுாரில் மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன், நகர்ப்புற உள்ளாட்சி மேம்பாட்டு திட்டத்தில் 77.11 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது.

இதனால் இப்பகுதியில்உள்ள திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை வழியே சென்று வந்த பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் காட்டு கூட்டு சாலையில் திருப்பி விடப்பட்டு மண்ணுார், நெமிலி வழியாக சென்று வருகின்றன.

இதில் காட்டு கூட்டு சாலையில் மாற்றுப்பாதையில் செல்லவும் என எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த எச்சரிக்கை பதாகை மீறி வரும் கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. இதனால் இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாமல்கடும் சிரமப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த எச்சரிக்கையை மீறி வெளி மாநில கனரக லாரி ஒன்று இந்த சாலையில் வந்த போது சிறுபாலம் கட்டும்பகுதியில் விபத்தில் சிக்கியது.

இதனால் இவ்வழியே இரு சக்கர வாகனங்களில் செல்லும் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இதையடுத்து கனரக லாரி அப்பறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீரானது.

இவ்வாறு எச்சரிக்கையை மீறி வரும் கனரகவாகனங்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததே காரணம் என பகுதிவாசிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.






      Dinamalar
      Follow us