ADDED : மார் 24, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார், 29; ஸ்ரீபெரும்புதுார், பட்டுநுால் சத்திரத்தில் தங்கி, வெங்காடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
வீட்டின் வெளியே 'ஸ்பிளண்டர்' பைக்கினை நிறுத்திவிட்டு, வீட்டிற்குள் சென்றார். பின், நேற்று காலை 7:00 மணிக்கு வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது பைக் காணாமல் போய் இருந்தது.
ஸ்ரீபெரும்புதுார் போலீசில் புகார் அளித்தார். கட்சிபட்டு பகுதியைச் சேர்ந்த வீரவேல், 27, கருணாகரன், 32, ஆகிய இருவரை கைது செய்தனர்.

