/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டூ - வீலரில் சென்றவர் நாய் மீது மோதி பலி
/
டூ - வீலரில் சென்றவர் நாய் மீது மோதி பலி
ADDED : செப் 14, 2024 07:42 PM
உத்திரமேரூர்:வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன், 49; இவர், ஒரகடம் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல வீட்டில் இருந்து, 'பேஷன் ப்ரோ' இருசக்கர வாகனம் வாயிலாக உள்ளாவூர்- - ஒரகடம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, காலை 5:30 மணிக்கு, உள்ளாவூர் அருகே சென்றபோது, நாய் ஒன்று திடீரென குறுக்கே வந்தது. நாய் மீது இருசக்கர வாகனம் மோதி, நிலை தடுமாறி மனோகரன் விழுந்தார். இதில், மனோகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சாலவாக்கம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.