sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

செங்கை புறநகர் பகுதிகளில் மறைக்கப்படாத கல்வெட்டுகள்

/

செங்கை புறநகர் பகுதிகளில் மறைக்கப்படாத கல்வெட்டுகள்

செங்கை புறநகர் பகுதிகளில் மறைக்கப்படாத கல்வெட்டுகள்

செங்கை புறநகர் பகுதிகளில் மறைக்கப்படாத கல்வெட்டுகள்


ADDED : மார் 28, 2024 12:57 AM

Google News

ADDED : மார் 28, 2024 12:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:தமிழகத்தில், லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக ஏப்., 19ல் நடக்கிறது. இந்த அறிவிப்பு வந்த மார்ச் 16ல் இருந்தே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாக, தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து, செங்கல்பட்டு புறநகர் பகுதிகளான சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், நிழற்குடை உள்ளிட்டவற்றில் இருந்த கல்வெட்டுகள் மறைக்கப்பட்டன.

ஆனாலும், கிராமப்புறங்களில் ராட்சத உயர கொடிக்கம்பங்கள் மறைக்கப்பட்டு, அதில் இருந்த கட்சிக் கொடிகள் மட்டும் அகற்றப்பட்டன.

அதேபோல, ஊராட்சிகளில் அமைக்கப்பட்டு உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பெயர்கள் மறைக்கப்படவில்லை.

அதேபோல, செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் கொண்ட கல்வெட்டுகளும் மறைக்கப்படவில்லை.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தலில் போல, இந்த தேர்தலில் தேர்தல் அலுவலர்கள் செயல்படவில்லை என, தோன்றுகிறது.

பத்து நாட்களைக் கடந்தும், பல இடங்களில், நெடுஞ்சாலையில் கட்சி வண்ணம் பூசப்பட்ட கம்பங்கள், இதுவரை அகற்றப்படாமல் உள்ளது.

அவற்றின் கீழே, கட்சி நிர்வாகிகள் பெயர் தாங்கி உள்ள கல்வெட்டுகள், இன்னும் மறைக்கப்படாமல் உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us