/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தல்
/
அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தல்
அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தல்
அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தல்
ADDED : ஆக 25, 2024 11:12 PM
உத்திரமேரூர்: உத்தரமேரூர் ஒன்றியம், சிறுமையிலூர் ஊராட்சிக்கு உட்பட்டது சித்தாலப்பாக்கம் கிராமம். இக்கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி எதிரே, பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது.
இந்த அங்கன்வாடி மையத்திற்கான கட்டடம், மிகவும் சிதிலம் அடைந்ததை அடுத்து, மாவட்ட நிர்வாக உத்தரவின்படி, ஓராண்டுக்கு முன் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
அதையடுத்து, இதுவரை இப்பகுதியில் அங்கன்வாடிக்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்தாமல் உள்ளது.இதனால், சித்தாலப்பாக்கத்தில் தனிநபருக்கு சொந்தமான கட்டடத்தில் தற்போது அங்கன்வாடி மையம் வாடகைக்கு இயக்கப்படுகிறது.
வாடகை கட்டடத்தில் போதுமான இடவசதி இல்லாமலும், மழை நேரங்களில் வகுப்பறையில் நீர் சொட்டும் நிலை உள்ளது. , அங்கன்வாடி மையத்திற்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப அப்பகுதியினர் தயக்கம் காட்டுகின்றனர்.
எனவே, சித்தாலப்பாக்கத்தில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் மற்றும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

