sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

/

சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : ஜூன் 18, 2024 05:57 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வணிகர் வீதியில் இருந்து, பல்லவர்மேடு, பிள்ளையார்பாளையம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் ராஜகோபால் பூபதி தெரு வழியாக சென்று வருகின்றனர்.

வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்த இச்சாலையில், இரு இடங்களில் மழை மற்றும் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக சாலையில் வழிந்தோடிய கழிவுநீரால் சாலை சேதமடைந்தள்ளது.

இதனால், லேசான மழைக்கே சாலை சேதமடைந்த பகுதியில் குட்டைபோல தேங்கிய மழைநீர் சகதிநீராக மாறி தேங்கியுள்ளது. பள்ளம் இருப்பது தெரியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, ராஜகோபால் பூபதி தெருவில், சேதமடைந்த சாலையை பேட்ச் ஒர்க் பணியாக சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us