/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
/
மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 23, 2025 12:53 AM

ஏனாத்துார்:வாலாஜாபாத் ஒன்றியம் ஏனாத்துார் ஊராட்சியில் பிரதான சாலை மற்றும் சுற்றியுளள பகுதியில் மழைநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை முறையாக துார்வாரி பராமரிக்காததால், இந்தியன் வங்கி கிளை அமைந்துள்ள பகுதியில், மண் திட்டுகளாலும், செடி, கொடிகள், கோரை புற்கள் வளர்ந்துள்ளதால், கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், மழை பெய்தால் கால்வாய் வாயிலாக தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, மழைநீர் வடிகால்வாயில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, கால்வாயை துார்வார ஏனாத்துார் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.