sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உத்திரமேரூர் அரசு பெண்கள் பள்ளி பகுதி நேரமாக செயல்பட முடிவு?

/

உத்திரமேரூர் அரசு பெண்கள் பள்ளி பகுதி நேரமாக செயல்பட முடிவு?

உத்திரமேரூர் அரசு பெண்கள் பள்ளி பகுதி நேரமாக செயல்பட முடிவு?

உத்திரமேரூர் அரசு பெண்கள் பள்ளி பகுதி நேரமாக செயல்பட முடிவு?


ADDED : ஜூன் 28, 2024 10:38 PM

Google News

ADDED : ஜூன் 28, 2024 10:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் பல ஆண்டுகளாக அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 1,400க்கும் மேற்பட்ட மாணவியர் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளிக்கான வகுப்பறை கட்டடங்கள், 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இக்கட்டடங்கள், நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருவதையடுத்து, பள்ளியில் உள்ள பழைய கட்டடங்களை அகற்றி அதற்கு மாற்றாக புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதற்காக 25 புதிய வகுப்பறைகள் ஏற்படுத்த 6 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசின் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, சேதமான பழைய கட்டடங்களை இடிக்க பள்ளிக்கல்வித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. சேதமான கட்டடங்களை அகற்றினால், போதுமான வகுப்பறை வசதி இல்லாத நிலை ஏற்படும்.

இதனால், ஆறாம் வகுப்பு முதல் - 10ம் வகுப்பு வரையிலான மாணவியர், கட்டுமான பணிகள் முடிவடையும் வரை, உத்திரமேரூரில் இருந்து, 3 கி.மீ., தூரத்தில் உள்ள பாப்பாங்குளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இடமாற்றம் செய்ய பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்கு, போக்குவரத்து அலைச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் மாணவியருக்கு உள்ளதாக கூறி, அவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, 10ம் வகுப்பு வரையிலான மாணவியருக்கு காலை நேரத்திலும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவியருக்கு மாலை நேரத்தில் வகுப்பு நடத்தவும், உத்திரமேரூர் பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட கல்வி நிர்வாகம் இணைந்து தீர்மானித்தது.

எனினும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவியர் பொதுத் தேர்வு எழுதுவதால், அவர்களுக்கு முழுநேர வகுப்பு நடத்த வேண்டும் என மாணவியரின் பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us