sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பாதை வசதியை முறைப்படுத்த வாலாஜாபாத் வாசிகள் கோரிக்கை

/

பாதை வசதியை முறைப்படுத்த வாலாஜாபாத் வாசிகள் கோரிக்கை

பாதை வசதியை முறைப்படுத்த வாலாஜாபாத் வாசிகள் கோரிக்கை

பாதை வசதியை முறைப்படுத்த வாலாஜாபாத் வாசிகள் கோரிக்கை


ADDED : மார் 10, 2025 07:27 AM

Google News

ADDED : மார் 10, 2025 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத் : வாலாஜாபாத் பேரூராட்சி, 15வது வார்டுபகுதியில், கலைஞர் கருணாநிதி தெரு உள்ளது.

இத்தெருவில் இருந்து, தேவராஜ் தெருவிற்கு சென்றடையும் வகையில், கடந்த ஆண்டு பேரூராட்சி நிதியின் கீழ், புதியதாக சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது.

இந்த குறுக்குத் தெரு பாதையை பயன்படுத்தி, இரு தெருக்களைச் சேர்ந்த குடியிருப்புவாசிகளும், பேருந்து நிலையம், பஜார் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், கருணா நிதி தெருவையும்,தேவராஜன் தெருவையும் இணைக்கும் குறுக்குத் தெரு பகுதியை, தனக்கு சொந்தமானதாக அப்பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவர், நில அளவீடு செய்து கற்கள் பதித்துள்ளதாக தெரிகிறது.

இதனால், கலைஞர் கருணாநிதி தெருவில் இருந்து, தேவராஜன் தெரு பகுதிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

பேரூராட்சி சார்பில், நிதி ஒதுக்கீடு செய்து,புதியதாக அமைக்கப்பட்ட சாலை பகுதி எவ்வாறு தனி நபருக்கு சொந்தமானதாகஇருக்கும் என,அப்பகுதியினர் ஆதங்கப்படுகின்றனர்.

மேலும், 15வது வார்டு, குறுக்குத் தெரு வழியை பயன்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us