/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அழிசூரில் பைப் உடைந்து வீணாகும் குடிநீர்
/
அழிசூரில் பைப் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : மே 13, 2024 05:35 AM

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அழிசூர் கிராமத்தின் குடிநீர் தேவைக்கு அப்பகுதி ஏரியையொட்டி இரண்டு திறந்தவெளி கிணறுகள் அமைத்து டேங்க்கில் தண்ணீர் ஏற்றி, வீட்டு குழாய்களில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், இப்பகுதியில் தற்போது சுழற்சி அடிப்படையில் வாரத்திற்கு ஒருமுறை என குழாய்களில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால், அழிசூரில் ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாட்டால் அப்பகுதியினர் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, அழிசூர் ஏரியில் இருந்து அப்பகுதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு செல்லும் பூமியில் புதைக்கப்பட்ட குடிநீர் பைப், அப்பகுதி பேருந்து நிறுத்தம் அருகே உடைபட்டுள்ளது.
இதனால், நீர்க்கசிவு ஏற்பட்டு அப்பகுதி பிரதான சாலையில் தண்ணீர் வழிந்தோடுகிறது. ஏற்கனவே அழிசூரில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில், பைப் உடைந்து குடிநீர் வீணாவதால் குடிநீர் பிரச்னை அதிகரித்துள்ளது.
எனவே, அழிசூர் கிராம பேருந்து நிறுத்தம் அருகே உடைப்பு ஏற்பட்ட குடிநீர் பைப்பை உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.