sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வீணாகும் திருப்பாற்கடல் பாலாறு குடிநீர்

/

வீணாகும் திருப்பாற்கடல் பாலாறு குடிநீர்

வீணாகும் திருப்பாற்கடல் பாலாறு குடிநீர்

வீணாகும் திருப்பாற்கடல் பாலாறு குடிநீர்


ADDED : ஜூன் 24, 2024 05:48 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இருவழிச் சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.

தற்போது, காஞ்சிபுரம் - பரமேஸ்வரமங்கலம் கிராமம் வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

தார் சாலை போடாத இடத்தில், எம் - சாண்ட் கொட்டி பேவர் பிளாக் கற்களை அடுக்கி, சாலையின் இருபுறமும் அழகு படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த சாலை ஓரத்தில், ராணிப்பேட்டை மாவட்டம், திருப்பாற்கடல் பகுதியில் இருந்து, பாலாறு குடிநீர், தக்கோலம் மற்றும் அரக்கோணம் பகுதியில் இருக்கும் மத்திய பாதுகாப்பு படை குடியிருப்புகளுக்கு தண்ணீர் செல்கிறது.

இந்த குழாய்களின் ஏர்வால்வில் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதுபோன்று வெளியேறும் தண்ணீர், காஞ்சிபுரம்- - அரக்கோணம் சாலை செல்லும் வாகன ஓட்டிகளை நனைக்கிறது.

எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து, வீணாக வெளியேறும் தண்ணீரை உபயோகமாக பயன்படுத்தும் வகையில், சரி செய்து கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us