sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பிரதான குழாயில் உடைப்பு ஓரிக்கையில் வீணாகும் குடிநீர்

/

பிரதான குழாயில் உடைப்பு ஓரிக்கையில் வீணாகும் குடிநீர்

பிரதான குழாயில் உடைப்பு ஓரிக்கையில் வீணாகும் குடிநீர்

பிரதான குழாயில் உடைப்பு ஓரிக்கையில் வீணாகும் குடிநீர்


ADDED : ஏப் 02, 2024 01:47 AM

Google News

ADDED : ஏப் 02, 2024 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சியில், 51 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பாலாறு, திருப்பாற்கடல், வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட பைப்லைன் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஓரிக்கை பாலாற்றாங்கரையில் இருந்து, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு குடிநீர் வினியோகிக்க, காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஓரிக்கையில் நிலத்தடியில் புதைக்கப்பட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, இரு மாதங்களுக்கு மேலாக குடிநீர் வீணாக சாலையில் வெளியேறி வருகிறது.

இதனால், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், நீண்டநேரம் மின் மோட்டார் இயங்குவதால், மோட்டாரும் விரைவில் பழுதாகும் சூழல் உள்ளது.

எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us