ADDED : ஆக 14, 2024 10:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், வாரணவாசி ஊராட்சியில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்றுநடந்தது.
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடந்த இம்முகாமில், பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.
இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றம், பட்டா திருத்தம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வழங்கப்பட்டன.
ஜாதிச் சான்று, குடும்ப அட்டை, மகளிர் சுயஉதவிக் குழு வங்கி கடன், தொழில் கடன் மானியம் என 125 பயனாளிகளுக்கு 1.19 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டன.