/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பு கம்பிகள் இல்லாத வெள்ளைகேட் மேம்பாலம்
/
தடுப்பு கம்பிகள் இல்லாத வெள்ளைகேட் மேம்பாலம்
ADDED : ஜூலை 07, 2024 12:22 AM

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஆறுவழி சாலை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகின்றன.
இதில், வெள்ளைகேட் மேம்பாலத்தின் வழியாக, பெங்களூரு, ஒசூர், தர்மபுரி, வேலுார் ஆகிய மார்க்கத்தில் இருந்து சென்னை மற்றும் சென்னை, சுங்குவார்சத்திரம் மார்கத்தில் இருந்து பெங்களூரு வரையில், வாகனங்கள் செல்கின்றன.
இதில், வெள்ளைகேட் மேம்பாலம் ஏற்றம் மற்றும் இறக்கத்தில் சாலையோரம் தடுப்பு கம்பிகள் இல்லை. இதனால், இரு மார்க்கங்களில் இருந்து, வாகனங்கள் நிறுத்தும் போது வாகனங்கள் நிலை தடுமாறும் அபாயம் உள்ளது.
எனவே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வெள்ளைகேட் மேம்பாலம் ஓரம் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆறுவழிச் சாலை பணி நிறைவு பெறும் போது, தடுப்புகள் அமைக்க பரிசீலனை செய்யப்படும்' என்றார்.