sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

எஸ்.பி., கோவில் - ஸ்ரீபெரும்புதுார் தடத்தில் கிளாம்பாக்கத்திலிருந்து பஸ் இயக்கப்படுமா?

/

எஸ்.பி., கோவில் - ஸ்ரீபெரும்புதுார் தடத்தில் கிளாம்பாக்கத்திலிருந்து பஸ் இயக்கப்படுமா?

எஸ்.பி., கோவில் - ஸ்ரீபெரும்புதுார் தடத்தில் கிளாம்பாக்கத்திலிருந்து பஸ் இயக்கப்படுமா?

எஸ்.பி., கோவில் - ஸ்ரீபெரும்புதுார் தடத்தில் கிளாம்பாக்கத்திலிருந்து பஸ் இயக்கப்படுமா?


ADDED : மார் 03, 2025 12:19 AM

Google News

ADDED : மார் 03, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கபெருமாள் கோவில், சிங்கபெருமாள்கோவில் - ஸ்ரீபெரும்புதுார் தடத்தில், கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்து இயக்க வேண்டுமென, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீ பெரும்புதுார் தடத்தில் திருக்கச்சூர், தெள்ளிமேடு, ஆப்பூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு, தாம்பரம், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.

அதேபோல ஒரகடம், ஸ்ரீ பெரும்புதுார் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மறைமலைநகர், காட்டாங்கொளத்துார், பொத்தேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கில் ஆண், பெண் தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். சிங்கபெருமாள் கோவில், திருக்கச்சூர் பகுதிகளில், வெளி மாவட்ட இளம்பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த தடத்தில், செங்கல்பட்டு -- திருவள்ளூர் செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் நான்கு தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறன.

இது தவிர, தாம்பரத்தில் இருந்து சிங்கபெருமாள் கோவில் -- ஒரகடம் வழியாக மீண்டும் தாம்பரம் செல்ல, ஒரே ஒரு மாநகர பேருந்து இயக்கப்படுகிறது.

இந்த தடத்தில் இருந்து கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு, நேரடி பேருந்துகள் இல்லை.

இதனால், இந்த பகுதி மக்கள் சிங்கபெருமாள்கோவில் சென்று, அங்கிருந்து மாற்று பேருந்து வாயிலாக கிளாம்பாக்கம் செல்லும் நிலை உள்ளது.

மேலும், இந்த தடத்தில் மகளிர் இலவச பேருந்து இயக்கப்படாததால், வேலைக்குச் செல்லும் பெண்கள் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில்,'லிப்ட்' கேட்டு செல்லும் நிலை தொடர்கிறது.

எனவே, இந்த தடத்தில் கூடுதல் பேருந்து மற்றும் மகளிர் பேருந்துகள் இயக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us