/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் - அரும்புலியூர் பஸ் மீண்டும் இயங்குமா?
/
காஞ்சிபுரம் - அரும்புலியூர் பஸ் மீண்டும் இயங்குமா?
காஞ்சிபுரம் - அரும்புலியூர் பஸ் மீண்டும் இயங்குமா?
காஞ்சிபுரம் - அரும்புலியூர் பஸ் மீண்டும் இயங்குமா?
ADDED : மே 06, 2024 03:39 AM
உத்திரமேரூர் : காஞ்சிபுரத்தில் இருந்து, வாலாஜாபாத், பழையசீவரம், திருமுக்கூடல், அரும்புலியூர் வழியாக தடம் எண்; டி55ஏ என்றஅரசுபேருந்துகுருமஞ்சேரிவரை இயக்கப்படுகிறது.
அருங்குன்றம், சீத்தாவரம், கரும்பாக்கம், சீட்டணஞ்சேரி போன்றகிராமங்களைச் சேர்ந்த மாணவ - மாணவியர், தொழிலாளர்கள்,வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், இப்பேருந்து மூலம் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிக்கின்றனர்.
இப்பேருந்துநாளொன்றுக்கு மூன்று முறை இயங்கி வந்தது. இந்நிலையில், பிற்பகல்12:30 மணிக்கு காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு, 1:30 மணிக்கு குருமஞ்சேரிபகுதிக்கு வந்தடையும்பேருந்துசேவை, ஓராண்டாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், மதிய நேரத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து, அரும்புலியூர் சுற்று வட்டார பகுதிகளுக்கு பயணிக்க, பேருந்துவசதி இல்லாமல் கிராமத்தினர் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, நிறுத்தம்செய்த மதிய நேர பேருந்து சேவையை, மீண்டும் இயக்க குருமஞ்சேரி மற்றும்அரும்புலியூர்உள்ளிட்ட கிராம வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.