/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குழந்தைகளை வைத்து யாசகம் கேட்டு தொல்லை தரும் பெண்கள்
/
குழந்தைகளை வைத்து யாசகம் கேட்டு தொல்லை தரும் பெண்கள்
குழந்தைகளை வைத்து யாசகம் கேட்டு தொல்லை தரும் பெண்கள்
குழந்தைகளை வைத்து யாசகம் கேட்டு தொல்லை தரும் பெண்கள்
ADDED : ஜூன் 17, 2024 03:33 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில், பேருந்து நிலையம், ரெட்டை மண்டபம் சிக்னல், கங்கைகொண்டான் மண்டபம், மேட்டுத்தெரு, காந்திரோட்டில் உள்ள பட்டு சேலை கடைகள் ஆகிய பகுதிகளில், கை குழந்தைகளுடன் பெண்கள் பலர் அன்றாடம் யாசகம் கேட்டு பயணியரை தொந்தரவு செய்து வருகின்றனர்.
குழந்தைகளை வைத்து யாசகம் கேட்கக் கூடாது என, குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் சைல்டு லைன் மற்றும் போலீசார் அப்பெண்களை பலமுறை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இருப்பினும், ராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து பேருந்து பிடித்து வரும் இப்பெண்கள், காஞ்சிபுரம் மாநகராட்சி முழுதும் அன்றாடம் குழந்தைகளை வைத்து யாசகம் கேட்டு பயணியர், வாகன ஓட்டிகளை தொந்தரவு செய்கின்றனர்.
கடும் வெயிலில் குழந்தையை வைத்துக்கொண்டு திரிவதால், குழந்தைகள் மயக்க நிலையில் இருப்பதை கண்டு, பயணியர், பொதுமக்கள் பார்த்து பரிதாபப்படுகின்றனர்.
குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்கனவே பலமுறை ரெய்டு நடத்தி, குழந்தைகளை மீட்டுள்ளனர். அதேபோல, இப்பெண்களை காப்பகங்களில் ஒப்படைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இருப்பினும், யாசகம்கேட்டு தொந்தரவு செய்வது குறைவதாக இல்லை.
குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து, இப்பெண்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது குறையும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.