sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சுரகரேஸ்வரர் கோவிலில் வரும் 10ல் குபேரர் அட்சய திருதியை வழிபாடு

/

சுரகரேஸ்வரர் கோவிலில் வரும் 10ல் குபேரர் அட்சய திருதியை வழிபாடு

சுரகரேஸ்வரர் கோவிலில் வரும் 10ல் குபேரர் அட்சய திருதியை வழிபாடு

சுரகரேஸ்வரர் கோவிலில் வரும் 10ல் குபேரர் அட்சய திருதியை வழிபாடு


ADDED : மே 02, 2024 10:26 PM

Google News

ADDED : மே 02, 2024 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில், சுரகரேஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான குபேர ஸ்தலமான இக்கோவிலில், மூலவர் உள்ள கருவறைக்கு முன் ஐந்தடி உயரத்தில் குபேரர் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

காஞ்சியில் முதன் முதலில், குபேரனுக்கு என, தனி சிலை இங்கு நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. அட்சய திருதியை அன்று, குபேரனை வழிபட்டால், செல்வ செழிப்பிற்கு வழிவகுப்பதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இதனால், ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று குபேரனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி அட்சய திருதியை தினமான வரும் 10ம் தேதி, இக்கோவிலில் குபேரர் அட்சய திருதியை வழிபாடு நடக்கிறது.

இதில், காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, கூட்டு வழிபாடு சங்கல்பம், மங்கல இசை, காலை 10:00 மணிக்கு மஹா தீபாராதனையும் நடக்கின்றன.

விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் தர்மகர்த்தா, குபேரர்அட்சய திருதியை வழிபாட்டுக் குழுவினர், கோவில் அர்ச்சகர் உள்ளிட்டோர் இணைந்து செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us