/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கு 10 பேர் கைது: 4 பேருக்கு மாவு கட்டு 5 கல்லுாரி மாணவர்களுக்கும் தொடர்பு
/
காஞ்சி ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கு 10 பேர் கைது: 4 பேருக்கு மாவு கட்டு 5 கல்லுாரி மாணவர்களுக்கும் தொடர்பு
காஞ்சி ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கு 10 பேர் கைது: 4 பேருக்கு மாவு கட்டு 5 கல்லுாரி மாணவர்களுக்கும் தொடர்பு
காஞ்சி ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கு 10 பேர் கைது: 4 பேருக்கு மாவு கட்டு 5 கல்லுாரி மாணவர்களுக்கும் தொடர்பு
ADDED : மார் 16, 2025 01:38 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் ரவுடியான வசூல் ராஜா, கடந்த 11ம் தேதி, வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 5 கல்லுாரி மாணவர்கள் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் 4 பேர் தப்பியோட முயற்சித்தபோது விழுந்ததால், கை எலும்பு முறிந்து மாவு கட்டு போடப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை பழிவாங்கும் நோக்கத்தில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாமல்லன் நகரைச் சேர்ந்தவர் ராஜா என்கிற வசூல் ராஜா, 38; இவர் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல், அடிதடி என, 20க்கும் மேற்பட்ட வழக்குகளோடு, காஞ்சிபுரத்தில், 'ஏ' பிளஸ் பிரிவு ரவுடியாக வலம் வந்தார்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாமல்லன் நகரில் இருந்து திருக்காலிமேடு ரேஷன் கடை அருகே, கடந்த 11ம் தேதி, பிற்பகல் 12:00 மணியளவில் வந்தார். அப்போது, தனியாக இருந்த வசூல் ராஜா மீது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர், திடீரென நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். இதில் நிலை தடுமாறி விழுந்த வசூல் ராஜாவின் முகம் மற்றும் உடலின் பல்வேறு பாகங்களில் கத்தியால் சரமாரி வெட்டினர். படுகாயமடைந்த வசூல் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெட்டிய நபர்கள், உடனடியாக அங்கிருந்து தப்பித்து ஓடினர்.
காஞ்சி தாலுகா போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும், வசூல் ராஜாவின் முந்தைய குற்ற சம்பவங்கள் பற்றியும் ஆராய்ந்தனர்
கொலை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞர்களின் காட்சிகள், திருக்காலிமேடு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்தது. காட்சிகளில் பதிவாகியிருந்த நபர்களின் புகைப்படங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்களின் பெயர், விபரங்கள் தெரியவந்தன.
இதையடுத்து, திருமால்பூர் ரயில் நிலையம் அருகே இக்கொலை வழக்கு தொடர்புடைய இளைஞர்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சென்றபோது, அங்கிருந்த பரத், 20; சிவா, 19; திலீப்குமார், 19; சூர்யா, 19; சுரேஷ், 21, ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர், அப்போது, தப்பி ஓடிய பரத், சிவா, திலீப்குமார் ஆகிய மூன்று பேரின் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், இக்கொலையில் தொடர்புடைய மேலும் பலர் பற்றி தகவல் கிடைத்தது. அதன்படி, ஜாகீர்உசேன், 25. சுல்தான், 32; ஆகிய இருவரும் வாலாஜாபாத் வெண்குடி அருகே பதுங்கியிருந்தபோது, ஜாகீர் உசேனை போலீசார் பிடிக்க முயன்றபோது, அங்கு விழுந்து கை எலும்பு முறிந்தது. சுல்தானையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் கிடைத்த தகவல்களை வைத்து, மோகனசுந்தரம், 18; மணிமாறன், 19; சரண்குமார், 20, ஆகிய மூன்று பேரையும் போலீசார் பிடித்தனர். இவ்வழக்கில், மொத்தம் 10 பேரை போலீசார் கைது செய்த நிலையில், காஞ்சிபுரத்தின் ரவுடி பொய்யாக்குளம் தியாகுவும், செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த அசோக், 23, என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
கை உடைந்த நான்கு பேருக்கும், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் போலீசார் சிகிச்சைக்கு சேர்த்த பின், நேற்று, நீதிமன்ற காவலில் 10 பேரையும், வேலுார் சிறையில் நேற்று போலீசார் அடைத்தனர்.