/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் 1,000 பேருக்கு அன்னதானம்
/
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் 1,000 பேருக்கு அன்னதானம்
ADDED : ஜன 18, 2025 12:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை ஊராட்சி கட்டடம் அருகே, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108வது ஆண்டு பிறந்த நாள் விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட செயலர் ஆர்.வீ.ரஞ்சித்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
எம்.ஜி.ஆரின் திருஉருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து, 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த தொண்டர்கள் மற்றும் மீட்பு குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்.