ADDED : ஜன 21, 2024 11:42 PM
காஞ்சிபுரம்: உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாவில் பொதுவினியோக குறைதீர் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், காஞ்சிபுரம் தாலுகா தேனம்பாக்கத்திலும், உத்திரமேரூரில் ரெட்டமங்கலத்திலும், வாலாஜாபாதில் குருவிமலையிலும், ஸ்ரீபெரும்புதுார் நெமிலியிலும், குன்றத்துாரில் அமரம்பேட்டிலும் குறைதீர் முகாம் நடந்தது. புதிய ரேஷன் கார்டு, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல் எண் மாற்றம், அட்டை வகை மாற்றம் உள்ளிட்ட 177 மனுக்கள் வரப் பெற்றன. இதில், தகுந்த ஆவணங்கள் இணைக்கப்பட்ட 109 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டன.
மீதமுள்ள 68 மனுக்கள் மீது உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என, காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி தெரிவித்தார்.