sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வீடு கட்டும் ஆணைக்காக 11,789 நபர்கள் காத்திருப்பு

/

வீடு கட்டும் ஆணைக்காக 11,789 நபர்கள் காத்திருப்பு

வீடு கட்டும் ஆணைக்காக 11,789 நபர்கள் காத்திருப்பு

வீடு கட்டும் ஆணைக்காக 11,789 நபர்கள் காத்திருப்பு


ADDED : மே 07, 2025 01:04 AM

Google News

ADDED : மே 07, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:சமூக பொருளாதார ஜாதி வாரி கணக்கெடுப்பின் படி, 17,653 நபர்களில் 5,855 நபர்களுக்கு மட்டுமே வீடு கட்டும் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதம், 11,789 நபர்களுக்கு வீடு கட்டும் ஆணைக்காக காத்திருக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 274 ஊராட்சிகளில், 1,354 குக்கிராமங்கள் உள்ளன. இதில், 2011ம் ஆண்டு சமூக பொருளாதார ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

குடிசை வீடு இருக்கும் நபர்களுக்கு, பிரதமர் வீடு வழங்கும் திட்டம், பசுமை வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகளை கட்டியுள்ளனர்.

இதையடுத்து, 'ஆவாஸ் பிளஸ்' திட்டத்தில், 2018ம் ஆண்டு வீடு தேவைப்படுவோருக்கு, ஊரக வளர்ச்சி துறையினர் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர்.

தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், பசுமை வீடு வழங்கும் திட்டம் முடக்கப்பட்டு, கனவு இல்ல திட்டத்திற்கு, 2021ம் ஆண்டு ஊரக வளர்ச்சி துறையினர் மீண்டும் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.

அதேபோல, 2022ம் ஆண்டு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்திற்கு, புதிய குடிசை வீடுகளை கணக்கெடுப்பு நடத்தி முடித்தனர்.

இதன் வாயிலாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 17,653 வீடுகள் தேவைப்படும் என, புள்ளி விபரம் தெரிய வந்தது. இதுதவிர, 2,966 வீடுகள் பயனாளிகள் பட்டியலில் தேர்வு செய்ய முடியாத நிலை இருந்தன.

அதன்படி, கனவு இல்லம் திட்டத்தில், 2024- - 25ம் நிதி ஆண்டு 3,000 வீடுகள் வழங்கினர். இதில், 2,855 வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து, 2025 - 26ம் நிதி ஆண்டிற்கு 3,000 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுதும், வீடு தேவைப்படுவோரின் கணக்கெடுப்பின்படி, 17,653 நபர்களுக்கு வீடுகள் தேவை இருந்தன.

கடந்த நிதி ஆண்டு, நடப்பு நிதி ஆண்டு என, இரண்டு நிதி ஆண்டுகளுக்கு, 5,855 நபர்கள் மட்டுமே வீடு கட்ட ஆணை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில், 11,798 நபர்களுக்கு வீடு கட்டும் ஆணைக்காக காத்திருக்கின்றனர்.

அடுத்த நிதி ஆண்டில்சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில்,ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், 11,798 நபர்களுக்கு வீடு கட்டும் அனுமதி கிடைப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடந்த நிதி ஆண்டு, கனவு இல்ல திட்டத்தில், 3,000 நபர்களுக்கு வீடு கட்டும் ஆணை வழங்கினர். இதில், 2,855 நபர்கள் மட்டுமே வீடு கட்டி வருகின்றனர்.

நடப்பாண்டிற்கு, 3,000 நபர்களுக்கு வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும், 1,000 நபர்களுக்கு கூடுதலாக வீடு கட்ட அனுமதி கேட்டுள்ளோம். ஒப்புதல் கிடைத்த பின் பணி ஆணை வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.






      Dinamalar
      Follow us