sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நெட்டேரில் 12,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

/

நெட்டேரில் 12,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

நெட்டேரில் 12,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

நெட்டேரில் 12,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : ஏப் 13, 2025 01:35 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொது விநியோகத் திட்ட அரிசி கடத்தப்படுவதாக வரக்கூடிய தகவல்களின் அடிப்படையில் அவ்வப்போது சோதனை நடத்தி, வெளி மாநிலங்களுக்கு கடத்த பதுக்கியிருந்த அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகளுக்கு வந்த தகவல் அடிப்படையில், நெட்டேரி கிராமத்தில், குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருடன், ஆய்வு நடத்தியுள்ளனர்.

அப்போது, அசோக் லேலன்ட் வேன் மற்றும் டாடா மினி லாரி ஆகிய வாகனங்களில், ஏராளமான மூட்டைகளில் ரேஷன் அரிசியை சிலர் ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

அதிகாரிகள் சோதனை நடத்தியதை அறிந்த மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து, அரிசி மூட்டைகளை ஆய்வு செய்ததில், 239 மூட்டைகளில், 12,000 கிலோ ரேஷன் அரிசி ஆவணங்கள் இன்றி இருந்தது தெரியவந்தது.

அரிசி மற்றும் வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us