/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
4 வாகனங்கள் மோதல் 15 பேர் படுகாயம்
/
4 வாகனங்கள் மோதல் 15 பேர் படுகாயம்
ADDED : பிப் 23, 2024 01:16 AM

குன்றத்துார், வேலுாரில் இருந்து, தாம்பரம் நோக்கி தடம் எண்: 155 அரசு பேருந்து, 50க்கும் மேற்பட்ட பயணியருடன், காஞ்சிபுரம், ஒரகடம் வழியே நேற்று சென்று கொண்டிருந்தது.
வண்டலுார் - --வாலாஜாபாத் நெடுஞ்சாலை, படப்பை அருகே சாலமங்கலம் பகுதியைக் கடந்தபோது, முன்னால் சென்ற லாரி திடீரென நின்றது.
இதனால், அரசு பேருந்தும், அதன்பின் வந்த தொழிற்சாலை பேருந்தும், லாரியும் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டன.
இதில், அரசு மற்றும் தொழிற்சாலை பேருந்துகளில் பயணித்த 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அப்பகுதியில் இருந்தோர் அவர்களை மீட்டு '108' ஆம்புலன்ஸ் வாகனத்தில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு, சிகிச்சை பெற்று அனைவரும் வீடு திரும்பினர். மணிமங்கலம் போலீசார், விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.