/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கண் மருத்துவ முகாம் 155 பேர் பங்கேற்பு
/
கண் மருத்துவ முகாம் 155 பேர் பங்கேற்பு
ADDED : அக் 26, 2025 10:47 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாமில், 155 பேர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் கோவில் நகர லயன்ஸ் சங்கம், சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம், காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
சென்னை அரவிந்த் கண் மருத்துவமனையைச் சேர்ந்த, கண் மருத்துவ நிபுணர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். முகாமில், 155 பேர் பங்கேற்றனர்.
கண்புரை குறைபாடு உள்ள, 34 பேருக்கு விழிலென்ஸ் பொருத்தி, இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்காக, சென்னை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
லேசான கண்பார்வை குறைபாடு உள்ள, 55 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

