sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன், 50,000 'ஆட்டை'

/

வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன், 50,000 'ஆட்டை'

வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன், 50,000 'ஆட்டை'

வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன், 50,000 'ஆட்டை'


ADDED : டிச 09, 2024 01:45 AM

Google News

ADDED : டிச 09, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்பதுார்:சுங்குவார்சத்திரம் அருகே மதுரமங்கலம் அடுத்த செல்லம்பட்டறை கிராமத்தை;r சேர்ந்தவர் மரியசத்தியா, 55. இவரது மனைவி குழந்தைதெரேசா, 50. இவர், குடும்பத்துடன் ஸ்ரீபெரும்புதுார் அருகே நெமிலியில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.

இவரது வீட்டின் அருகே, குழந்தைதெரேசாவின் தங்கை தீபா, 48, சொந்தமான வீடு உள்ளது. தீபா, கணவர் மற்றும் குழந்தைகளுடன் அம்பத்துாரில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.

அவ்வப்போது, இருவரும் சொந்த வீட்டிற்கு சென்று வந்தனர். இந்நிலையில், மரியசத்தியாவின் வீட்டு வாசலில் நிறுத்தபட்டிருந்த காரை எடுக்க, அதே பகுதியில் வசிக்கும் குழந்தை தெரேசாவின் மற்றொரு அக்கா மகன் நேவின்குமார், 28, நேற்று மதியம் மரியசத்தியா வீட்டிற்கு சென்றார்.

அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவை உடைத்து, 12 சவரன் நகை திருடப்பட்டிருந்தது.

அதேபோல், அருகில் இருந்த தீபாவின் வீட்டிலும், 4 சவரன் நகை மற்றும் 50,000 ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us