ADDED : ஜன 05, 2025 07:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிறுதாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன், 60. இவர், தன் பெட்டிக்கடையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தார்.
தகவல் கிடைத்து வந்த போலீசார், 1.8 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, பலராமனை கைது செய்தனர். சாலவாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.