sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 வேலை வாய்ப்பு முகாமில் 2,072 பேர் பங்கேற்பு

/

 வேலை வாய்ப்பு முகாமில் 2,072 பேர் பங்கேற்பு

 வேலை வாய்ப்பு முகாமில் 2,072 பேர் பங்கேற்பு

 வேலை வாய்ப்பு முகாமில் 2,072 பேர் பங்கேற்பு


ADDED : டிச 28, 2025 05:46 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியில் நேற்று நடந்த வேலைவாய்ப்பு முகாமில், 2,072 பேர் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40,656 படித்த இளைஞர்கள் அரசு வேலை வேண்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.

இவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆண்டிற்கு இரண்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தாண்டுக்கான இரண்டாவது பெரிய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியில் நேற்று நடந்தது. 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 20,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.

இம்முகாமில், 2,072 இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் 408 ஆண்களும், 125 பெண்களும் என 533 பேர்களுக்கு பல்வேறு தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ளனர்.

மேலும் 202 ஆண்களும், 63 பெண்கள் என மொத்தம் 265 பேர், முதல் சுற்றில் தேர்வாகி, இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்தவர்களுக்கு, கைத்தறி துறை அமைச்சர் காந்தி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் உத்திரமேரூர் சுந்தர், காஞ்சிபுரம் எழிலரசன், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் துணை இயக்குநர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us