sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயக்க 25 கிராமத்தினர் வலியுறுத்தல்

/

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயக்க 25 கிராமத்தினர் வலியுறுத்தல்

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயக்க 25 கிராமத்தினர் வலியுறுத்தல்

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயக்க 25 கிராமத்தினர் வலியுறுத்தல்


ADDED : ஜன 30, 2024 09:54 PM

Google News

ADDED : ஜன 30, 2024 09:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:உத்திரமேரூர் ஒன்றியம், அகரம் துாளிக்கு, மேல்துாளி கிராமம் வழியாக, உத்திரமேரூர் பணிமனையில் இருந்து தடம் எண்: 89ஏ என்ற அரசு பேருந்து 4 நடையும், திருவண்ணாமலை மண்டலம், வந்தவாசி பணிமனையில் இருந்து தடம் எண்: 146 மற்றும் 6 என்ற அரசு பேருந்து, 6 நடையும் இயக்கப்பட்டு வந்தது.

இதனால், அகரம் மேல்துாளியைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கிராமத்தினர் அத்தியாவசியம் மற்றும் அவசிய தேவைக்காக உத்திரமேரூருக்கு சென்று வந்தனர்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கின்போது அனைத்து பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது.

ஊரடங்கு தளர்வுக்கு பின், தடம் எண்: 89ஏ அரசு பேருந்து மட்டும், மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்காக காலை 8:00 மணிக்கும், மாலை 6:00 மணிக்கும் வந்து அகரம் துாளிக்கு வந்து செல்கிறது.

ஆனால், வந்தவாசி பணினை பேருந்தான தடம் எண்: 146, 6 ஆகிய பேருந்து இயக்கப்படவில்லை.

இதனால், மேல்துாளியை சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராமத்தினர், காலை 8:00 மணிக்கு மேல், பேருந்து வசதி இல்லாததால், பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை, வேலைக்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறோம் என, கிராமத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே, உத்திரமேரூர் பணிமனை பேருந்தான தடம் எண்: 89ஏ பேருந்து கூடுதல் நடை இயக்கவும், வந்தவாசி பணிமனையில் இருந்து நிறுத்தப்பட்ட, தடம் எண்: 146, 6 ஆகிய பேருந்துகளை வழக்கம்போல மீண்டும் அகரம் மேல்துாளி வழியாக சென்னைக்கு இயக்க வேண்டும் என, 25க்கும் மேற்பட்ட கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us