sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தாம்பரம் - பெங்களூரு இடையே 3 'ஏசி' அரசு பஸ் சேவை துவக்கம்

/

தாம்பரம் - பெங்களூரு இடையே 3 'ஏசி' அரசு பஸ் சேவை துவக்கம்

தாம்பரம் - பெங்களூரு இடையே 3 'ஏசி' அரசு பஸ் சேவை துவக்கம்

தாம்பரம் - பெங்களூரு இடையே 3 'ஏசி' அரசு பஸ் சேவை துவக்கம்


ADDED : ஜூலை 24, 2025 02:00 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 02:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் வழியாக பெங்களூருக்கு செல்லும், மூன்று 'ஏசி' பேருந்து சேவையை காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் துவக்கி வைத்தார்.

அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் வழியாக பெங்களூருக்கு சென்று வரும் வகையில், மூன்று 'ஏசி' அரசு பேருந்து சேவை துவக்க விழா காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நேற்று நடந்தது.

இதில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் கொடியசைத்து பேருந்து சேவையை துவக்கி வைத்தார்.

இப்பேருந்துகளில் பயணியரின் வசதிக்காக மொபைல்போன் சார்ஜர், பயணியர் பாதுகாப்பு மற்றும் நடத்துநர் வசதிக்ககாவும் தனித்தனியாக, 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்கள், பயணியர் இறங்கும் இடத்தை நடத்துநர் தெரிவிக்கும் வகையில் ஒலி பெருக்கி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இப்பேருந்தில் உள்ளது.

இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி, காஞ்சிபுரம் மண்டல பொது மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை மேலாளர் வணிகம் ஸ்ரீதர், உதவி மேலாளர் தொழில்நுட்பம் தட்சணாமூர்த்தி, காஞ்சிபுரம் பணிமனை கிளை மேலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us