sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

33 சிவனடியார்களுக்கு காஞ்சியில் விருது

/

33 சிவனடியார்களுக்கு காஞ்சியில் விருது

33 சிவனடியார்களுக்கு காஞ்சியில் விருது

33 சிவனடியார்களுக்கு காஞ்சியில் விருது


ADDED : டிச 01, 2024 08:26 PM

Google News

ADDED : டிச 01, 2024 08:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில், சித்தாந்த அறிஞர், திருமுறை அருட்பணிக்கு பெரிதும் தொண்டாற்றி வரும் அன்பர்களுக்கும் கைலாய யாத்திரை சென்று வந்தவர்களுக்கு கயிலைமணி விருது வழங்கும் விழா அறக்கட்டளை நிறுவனர் சு.சதாசிவம் தலைமையில் நடந்தது.

புலவர் சரவண சதாசிவம், சிவஞான அருள்நெறி அறக்கட்டளை நிறுவனர் எஸ்.ஞானப்பிரகாசம், காஞ்சி சிவனடியார் கூட்டத்தின் தலைவர் எம்.எஸ்.பூவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளையின் பொருளாளர் எம்.பெருமாள் வரவேற்றார்.

விழாவில், காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத ஞானப்பிரகாச சுவாமிகள் மற்றும் நிடுமாமிடி வீரேஸ்வர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் பங்கேற்று விருதாளர்களுக்கு சைவ சித்தாந்தப் பேரொளி, அருட்பணி தருமசீலர், அருட்பணி அருந்தொண்டர், திருமுறை சீர்பரவுவார், திருமுறை செல்வர், அருட்பணிச்செம்மல் உள்ளிட்ட விருது வழங்கினர்.

மேலும், கைலாய யாத்திரை சென்று வந்த, 33 சிவனடியார்களுக்கு கயிலை மணி விருதுகளும் வழங்கப்பட்டன. முன்னதாக மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் ஓதுவார் பா.சற்குருநாதன் தலைமையில் திருமுறை இன்னிசை நடந்தது.






      Dinamalar
      Follow us